Monday, October 26, 2009

எதிலும் முனைப்பின்றிச்

எதிலும் முனைப்பின்றிச்

சோம்பலாய் இருக்கிறேன்.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும்

என விட்டுவிட்டேன் உலகத்தை.

பத்து நாட்களுக்கான அரிசி

என் பையில் இருக்கிறது.

கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.

எதற்குத் தொணதொணப்பு

மாயையையும் ஞானத்தையும் பற்றி?

கூரையில் வீழும்

இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி

வசதியாக அமர்ந்திருக்கிறேன்,

கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.



- ட்டய்கு ரியோக்கன்

No comments: