Friday, October 23, 2009

இயேசு கிறிஸ்துவும், நானும்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்பை நான் ஏற்று கொண்ட போது என்னுடைய Teen age பருவத்தில் இருந்தேன்... வாலிப வயது, பெற்றோரின் அதிகமான செல்லம் இப்படி பல விசயங்கள்... இயேசுவின் அன்பையும், பரிசுத்த ஆவியானவரின் அபிசேகத்தையும் உதறி விட்டு உலகின் சிற்றின்ப பாதைகள் நோக்கி போக செய்தது...


அடித்தும் திருத்த முடியாத... அன்பாலும் திருத்த முடியாத ஒரு மகனாய் நான் இருந்த காலம் அது...


இயேசு கிறிஸ்துவின் பொறுமையை மிக மிக சோதித்த மகன்களில் நானும் ஒருவன்... ஒரு நொடி பொழுதில் அவர் என்னை அழிவுக்கு கொடுத்து இருக்கலாம்... ஆனால் பாவிகளில் மகா பாவியாகிய எனை விடுவித்து இரசிப்பது அவர் சித்தமாம்...


அவர் கண்களின் கிருபை கிடைத்தால்...அது இப் புவியில் பாக்கீயமே...

இயேசு கிறிஸ்து உடன் என் அனுபவங்களை சிறு சிறு பதிவுகளை போடலாம் என்று திட்டம்... இது அந்த பதிவு Series இல் முதலாவது...

மீண்டும் சந்திப்போம் மக்கள்ஸ்....


No comments: