.....அவர் (இயேசு கிறிஸ்து) யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்கு பைத்தியமாயும் இருக்கிறார். 1 கொரிந்தி 1:23
கல்வி அறிவு கொஞ்சமும் இல்லாத மக்கள் மிக எளிமையாக அணுக முடிந்த இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் வேறு வீதமாக தெரிகிறார்...
தாம் தெரிந்து கொண்ட மக்களை எப்படியும், எந்த வழி கொண்டும் சந்திக்கும் அவரை, இங்கு பவுல் மிக வித்தியாசமான பார்வைக்குள் வைக்கபடுவதை காண்பிக்கிறார்...
ரட்சிப்பின் அடிப்படை, தூண், அடித்தளம் எல்லாம் சிலுவை இல் அடிக்கப்பட்ட இயேசு மட்டும் தான்...
ஆனால் இங்கு நாம் காண்பது என்ன??!!!
யூதர்கள் சிலுவை இல் அடையாளத்தை தேடி கொண்டு இருந்தார்கள்... மனுஷ குமாரன் மரிக்க வேண்டிய வீதம் இப்படி தான் என்று தெளிவாக அவர்கள் கைகளில் இருந்த பழைய ஏற்பாடு ஆகமங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருந்தாலும்... இயேசு தாமே பல முறை கூறி இருந்தாலும்....
பவுல் பீரசங்கம் செய்த சிலுவை இல் அடிக்கப்பட்ட இயேசுவில் அவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அடையாளத்தை காணவில்லை...
அதுவே அவர்களுக்கு இடறலாயும் ஆகியது...
வானந்திரத்தில் மோசே மூலமாக நடத்தப்பட்ட எல்லா அடையாளங்கள் கண்டும் விசுவாசிக்க யோசித்த மக்களின் வழி வந்தவர்கள்....எளிமையாய், அவமானம் அனைத்தும் தாங்கி கொண்டு, இரத்தம் முழுவதும் வடிந்தவராய், தனிமையாய் தொங்கி கொண்டு இருக்கும் ஏசுவை பற்றிய பீரசங்கத்தை வீசுவசிப்பது மிக கடினமே...
அடுத்த பதிவில் தொடரும்...
No comments:
Post a Comment