Monday, October 26, 2009

எதிலும் முனைப்பின்றிச்

எதிலும் முனைப்பின்றிச்

சோம்பலாய் இருக்கிறேன்.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும்

என விட்டுவிட்டேன் உலகத்தை.

பத்து நாட்களுக்கான அரிசி

என் பையில் இருக்கிறது.

கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.

எதற்குத் தொணதொணப்பு

மாயையையும் ஞானத்தையும் பற்றி?

கூரையில் வீழும்

இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி

வசதியாக அமர்ந்திருக்கிறேன்,

கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.



- ட்டய்கு ரியோக்கன்

Friday, October 23, 2009

அவர் யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்கு பைத்தியமாயும்

.....அவர் (இயேசு கிறிஸ்து) யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்கு பைத்தியமாயும் இருக்கிறார். 1 கொரிந்தி 1:23

கல்வி அறிவு கொஞ்சமும் இல்லாத மக்கள் மிக எளிமையாக அணுக முடிந்த இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் வேறு வீதமாக தெரிகிறார்...

தாம் தெரிந்து கொண்ட மக்களை எப்படியும், எந்த வழி கொண்டும் சந்திக்கும் அவரை, இங்கு பவுல் மிக வித்தியாசமான பார்வைக்குள் வைக்கபடுவதை காண்பிக்கிறார்...

ரட்சிப்பின் அடிப்படை, தூண், அடித்தளம் எல்லாம் சிலுவை இல் அடிக்கப்பட்ட இயேசு மட்டும் தான்...

ஆனால் இங்கு நாம் காண்பது என்ன??!!!
யூதர்கள் சிலுவை இல் அடையாளத்தை தேடி கொண்டு இருந்தார்கள்... மனுஷ குமாரன் மரிக்க வேண்டிய வீதம் இப்படி தான் என்று தெளிவாக அவர்கள் கைகளில் இருந்த பழைய ஏற்பாடு ஆகமங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருந்தாலும்... இயேசு தாமே பல முறை கூறி இருந்தாலும்....
பவுல் பீரசங்கம் செய்த சிலுவை இல் அடிக்கப்பட்ட இயேசுவில் அவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அடையாளத்தை காணவில்லை...

அதுவே அவர்களுக்கு இடறலாயும் ஆகியது...
வானந்திரத்தில் மோசே மூலமாக நடத்தப்பட்ட எல்லா அடையாளங்கள் கண்டும் விசுவாசிக்க யோசித்த மக்களின் வழி வந்தவர்கள்....எளிமையாய், அவமானம் அனைத்தும் தாங்கி கொண்டு, இரத்தம் முழுவதும் வடிந்தவராய், தனிமையாய் தொங்கி கொண்டு இருக்கும் ஏசுவை பற்றிய பீரசங்கத்தை வீசுவசிப்பது மிக கடினமே...
அடுத்த பதிவில் தொடரும்...






இயேசு கிறிஸ்துவும், நானும்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்பை நான் ஏற்று கொண்ட போது என்னுடைய Teen age பருவத்தில் இருந்தேன்... வாலிப வயது, பெற்றோரின் அதிகமான செல்லம் இப்படி பல விசயங்கள்... இயேசுவின் அன்பையும், பரிசுத்த ஆவியானவரின் அபிசேகத்தையும் உதறி விட்டு உலகின் சிற்றின்ப பாதைகள் நோக்கி போக செய்தது...


அடித்தும் திருத்த முடியாத... அன்பாலும் திருத்த முடியாத ஒரு மகனாய் நான் இருந்த காலம் அது...


இயேசு கிறிஸ்துவின் பொறுமையை மிக மிக சோதித்த மகன்களில் நானும் ஒருவன்... ஒரு நொடி பொழுதில் அவர் என்னை அழிவுக்கு கொடுத்து இருக்கலாம்... ஆனால் பாவிகளில் மகா பாவியாகிய எனை விடுவித்து இரசிப்பது அவர் சித்தமாம்...


அவர் கண்களின் கிருபை கிடைத்தால்...அது இப் புவியில் பாக்கீயமே...

இயேசு கிறிஸ்து உடன் என் அனுபவங்களை சிறு சிறு பதிவுகளை போடலாம் என்று திட்டம்... இது அந்த பதிவு Series இல் முதலாவது...

மீண்டும் சந்திப்போம் மக்கள்ஸ்....


Tuesday, October 13, 2009

மீண்டும்

ஒரு மெகா இடைவெளி விழுந்து விட்டது. எழுதும் ஆர்வம் சுத்தமாக இல்லை... கொஞ்ச நாளுக்கு முன்பாக வந்து இருந்த ஒரு சில பதிவுகளையும் அழித்து விட்டு சென்றேன்..

சில இழப்புக்கள்...நிறைய தவறுகள்...தொடர்ச்சியாக அதில் நான் கற்று கொண்ட பாடங்கள் என வாழ்க்கை சுவாரசியமாக தான் சென்று கொண்டு இருக்கீறது.....

பாம்பின் வாழ்நாள் முழுவதும் ஒரு சம்பவம் அடிக்கடி நடக்கும்..கால இடைவெளி தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லலாம்.. பாம்பு அதன் தோலை ஒரு குறிப்பிட கால இடைவெளி விட்டு தனக்கு தான் நீக்கி விடும்.. பின்பு மீண்டும் அந்த தோல் வளர்ந்து என்று தொடர்ந்து நடக்கும் ஒரு விஷயம்...

வாழ்வில் சில விசயங்களும் அப்படி தான்... நாம் முழுவதும் நீக்கி, முழுவதும் விலகி, முழுவதும் உரித்து போட்டு விட்டதாக நினைத்தவை மீண்டும் வளர்ந்து நிற்கும் போது....

ஒன்று அதோடு வாழ பழகி கொள்கிறோம்... அல்லது அவைகளை வளராமல் தடுக்கும் வழிகளை கண்டு அறிகிறோம்....

மொத்தத்தில் நமக்கு கொடுக்கப்பட தேர்வு இரண்டு தான்... அவைகளோடு வாழ்வது அல்லது அவைகள் இன்றி வாழ்வது... இந்த அவைகள் எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்...

கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் மீறப்படுவது ஒரு அறிவாக, திறமையாக கருதபடும் காலம் இன்று மட்டும் அல்ல மனிதன் படைக்கபட்ட அன்றே தோன்றி விட்டது போலும்...

"புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தாயோ என்றார்" ஆதி 3:11 

ஆதாம் மட்டும் அல்ல... நானும் இந்த வார்த்தைகளை எதிர் கொண்டு வாழ்கிறேன்... அவரை போல ஒளிந்து கொண்டு...

ஆனால் ....புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும்,.......இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருந்த பல இப்பொழுது இல்லை...

இன்றைக்கு நான் தடுமாறினாலும்.... ஒரு போதும் அவைகளோடு வாழ பழக போவது இல்லை...

உங்கள் தேர்வு???!!!!

ஜீவனுக்கு போகிற வாசல்.... அதை கண்டுபிடிக்கீறவர்கள் சீலர் மத் 7:14  

Saturday, November 1, 2008

படித்ததில் புடித்தது...

ங்கொய்யால…

கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை

கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்

புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்

யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்

அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்

எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி

அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று

குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்

மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.


நன்றி - பாலபாரதி

Saturday, October 25, 2008

என் முதல் பதிவு.....



என் முதல் பதிவு.....
ஒரே இடத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக குப்பை கொட்டி ஆகிவிட்டது. ஆபீஸ் time பாதி நேரம் பவர் இல்லாமலும், மீதி நேரம் இணையத்தில் browse பண்ணியும் போக்கி பார்த்தாலும் இன்னும் நிறைய நேரம் இருப்பது எரிச்சலாக இருந்தது...

என்ன செய்யலாம்.... books படிக்கலாம்..but ஆபீஸ் சுழ்நிலையில் தூக்கம் வருது... குறும்செய்தி அனுப்பி பொழுதை போகலாம் என்றால்... என்னத்தை..யாருக்கு அனுப்ப??
என்ன தான் செய்ய??!!!! office வேலை எனக்கு அதிகம் இல்லை..அல்லது..எனக்கு கொடுக்கப்படும் எல்லாம் வேகமாக செய்து முடிக்க படும்....

ஒரு blog எழுதி தான் பார்ப்போம்... தூண்டுதல்??
...நிறைய நேரம் மற்றும்... எழுத்து ஆர்வம்.... அந்த இறந்து போனதாக நினைத்த ஆர்வத்தை மீண்டு எழ வைத்த இணைய எழுத்தர்கள்...
எதை எழுத??!!..எல்லாம் எழுதுவது..எல்லாரை பத்தியும் எழுதுவது என்று முடிவு..கண்டிப்பாக என் எண்ணங்களை சொல்ல ஒரு வழி வேண்டும் என்று எனக்கு தோணுது.
சரி...நல்லது...யார் படிப்பார்...அது ஒரு வெசயம் இல்லை ஆனால் என்னை பத்தி என்ன நினைத்து கொள்வார்கள் என் பதிவுகளை படிப்பவர்கள்??..
hmmm Never mind....
எதாவது செய்யனும் boss........
நன்றி..
அடுத்த பதிவில் சந்திப்போம்...