ங்கொய்யால…
கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை
கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்
புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்
யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்
அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்
எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி
அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று
குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்
மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.
நன்றி - பாலபாரதி
No comments:
Post a Comment