Thursday, March 31, 2011

விக்டோர் உய்கோ

விக்டோர் உய்கோ 

இவர் ஒரு பிரெஞ்சு கவிஞர்... இவர் கிறிஸ்துவை அறிந்தவரா??... இவரின் பின்புலம் ஏதும் அறியும் ஆர்வம் எனக்கு இல்லை... ஆனால் இவரின் சில கவிதை வரிகள் கிறிஸ்தவர்களாகியா நாம் பல சமயங்களில் மறந்து விடும் காரியங்களை அழுத்தமாக சொல்வது....

ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும்....இவர் கிறிஸ்துவை அறியாத ஒருவராய் இருந்தால் நாம் வெட்கபட தான் வேண்டும்...

 அன்பு,நேர்மை இந்த பண்புகளை இழந்து நிற்கும்...அல்லது தங்களின் ஆவிக்குரிய, உலக வாழ்வின் உயர்வை காணும் போது தங்களை சமரசம் செய்து கொள்ளும் கிறிஸ்தவர்கள் அதிகமாய் போய் விட்டது ஆச்சரியமே....

சில கவிதை வரிகள்....

"நல்லவனாக இருப்பது எளிது. நேர்மை உள்ளவனாக இருப்பது தான் கடினம்...."

:உண்மையான நண்பனாக அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே. "

"ஐந்தாம் மாடியிலிருந்து ஒரு பூச்சாடியை உங்கள் தலைமேல் போடும் மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்லுவது உங்களுக்கு நான் இந்த ரோஜாப்பூக்களை அளிக்கிறேன் என்பது..."  

அவர் எழுதிய கடைசி வார்த்தை ""நேசித்தல் என்பது செயலாற்றல்." 


நன்றி - தமிழச்சி

Tuesday, March 29, 2011

காலம்....பாதை..

காலம்....பாதை...

காலம் நம் கரங்களில் இல்லைதான்... ஆனால் போகும் பாதை கூட உன் கரங்களில் இல்லை என்றால்????....

கண்ணை கட்டி காட்டில் விட்டது போல என்பார்கள்....உன் கண் முன் காண்பது காடு மட்டுமாக இருந்தால்???...

இப்படி எல்லாம் யாருக்கும் புரியாமல் எதாவது எழுதி கொண்டு இருக்க முடிவு செய்து பிறகு அது வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்....

பொழுது போகாமல் எழுதிய ஒரு பதிவு....